சனி, 13 ஜூன், 2009

சாலையோரக் கலைஞன்

சாலையோரக் கலைஞன்
-பற்குணன்

தனக்கு தேவையானதை வாங்க கொவ்ரவமாகவும், தன் வயிற்றைக் கழுவ வேண்டுமே என்று ஏதுமில்லாதவனாகவோ, தனக்கில்லாவிட்டாலும் தன் குழந்தைக்காவது கால்பங்கு இறைப்பை நிறம்ப வேண்டுமே என்றும், தான் எதற்காக இதை செய்கிறேன் என்றும், ஒரு வேளை நம் பரம்பரை தொழில் இதுதானோ என்றும் ஓடி விளையாடவேண்டிய குழ்ந்தை இப்படி ஓடி ஓடி மற்றவர் காலில் விழுவதையும் உள்ளத்தால் உணராவிட்டாலும் கண்களால் உண்ரும் திறன் கொண்டும் கண்டும் காணாமல் செல்வது கண்கூடே...

ஒரு வேளை அவர்கள் தனக்கு ஏதும் இல்லை , தன்னால் ஏதும் செய்ய இயலாததால், அவர்கள் கை கால் இருந்தும் தன்னம்பிக்கை இல்லாமல் பிச்சை எடுக்கின்றனறே என்று சில உள்ளங்கள் மங்கும் போது அனைவரும் அப்படி அல்ல என மறுப்பு கூறுவது போல் தோற்றமளிக்கிறது அந்த ஓவியம். ஆம் பல்வேறு வகைப்பட்ட தூரிகைகளையும், பல வண்ணங்களையும் கொண்டு வரைந்த, வரையப்படும், வரையப்போகும் ஓவியங்களுக்கு தாய் போல் தோற்றமளிக்கிறது. உண்மைதான் ஒரு காலத்தில் சுவற்றில் வரைந்த புகழ்மிக்க எல்லோரா , அஜந்தா போன்ற குகை ஓவியங்களின் பரம்பரை தான் இந்த சாலை ஓவியம் என அந்த ஓவியம் மட்டுமல்ல் அந்த பிச்சைக்கார ஓவியர் இல்லை இல்லை கௌவ்ரவப்பிச்சை ஓவியரும் கூறுகிறார்...




ஓவியங்களை காட்சிப்படுத்தவும் , ஓவியர்களைப் பெறுமைப்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ள அந்த அரங்குக்குள் அழகான பெரிய கூடம் பல தரப்பட்ட மக்கள் , தன்னால் மற்றவர்கள் போல் பணம் கொடுத்து அந்த ஓவியங்களை வாங்க முடியாது என்றாலும் அதைபார்த்து செல்லக்கூடியவர்களும் அடங்கியதாக காணப்பட்டது அந்த அறை. அவ்வளவு உயர்ந்த கலையாக கருதப்படும் வியக்கலை இன்று பணக்காரர்கள் மட்டுமே அல்ல்து தன் வீட்டை உயர்த்திக்காட்டும் என்பதற்காகவோ, ஒரு வகை வியாபாரமாகிவிட்ட‌தை எண்ணி வருந்திப் பயனில்லை. ஏனெனில் இன்று கலைகள் அனைத்தும் வியாபாரமாகிப்போய் விட்டது என்பது கண்கூடே காணக்கூடியது...

சிந்தனைக்கு ஓர் கேள்வி




திருக்குறளை வாசிக்கும் போது உதடு ஒட்டாத குறள் எது ?


பதில்
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : 35
குறள் எண் : 341
குறள் : யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

விளக்கம் : ஒருவன் எந்தப்பொருளின் மீது ஆசையை நீக்கினானோ
அவன் அந்தப் பொருளால் துன்பம் அடைய மாட்டான்