சனி, 20 நவம்பர், 2010

குடிகார மிஷ்கினும், விபச்சாரி சாருவும்

தான் எடுத்துள்ள நந்தலாலா படம் தரமான படம் எனக்கருதுகிறாரா மிஷ்கின்...?


தினமணி இனயதளத்தில் வெளியாகியிருக்கும் அவரது கருத்தைப் படித்தவுடன் என்னசொல்வதென்று தெரியவில்லை.ஊருக்குதான் உபதேசம் என்பதுபோல் உள்ளது...

அவரது அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிற்கு புத்தகங்கள் வாங்கி வைத்துள்ளார் என்று நண்பர் செந்தில் மூலம் அறிந்தேன்.உனக்கு குடிக்க தெரியுமா, புகைக்க தெரியுமா என உதவி இயக்குனராக சேர வருபவர்களிடம் கேட்க்கும் அவர் படிப்பதுண்டா, என்னென்ன படித்துள்ளீர் என்றும் கேட்பது வியப்பாக இருக்கலாம் அதோடு மட்டுமல்லாமல் இவர்களெல்லாம் தங்களது புத்திஜீவித்தனத்தை எப்படியெல்லாம் காட்டுகின்றனர் என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.

எனது ராம் திரைப்படத்தில் காதலே தேவையில்லை என்றபோதிலும் இந்த தமிழ்திரைச் சூழல் என்னை அவ்வாறு வைக்கச்செய்தது என்று இயக்குனர் அமீர் தனது கையாளாகாத்தனத்தை கூறுகிறார். இதுதான் இவர்களது பிரச்சனை அதாவது, இவர்களாகவே இவர்களை கலை இயக்குனர்களாக அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புவது. இந்த விஷயத்தைப் போட்டுடைத்திருப்பார் இயக்குனர் ராம்.அனைத்தும் வணிக ரீதியாகவே எடுக்கப்படுகின்றன என்றும் மேலும் சினிமா குறித்து அவரது பார்வையும் நிலைப்பையும் தெளிவுபடுத்தியிருப்பார் அதனை ஓர் தனிப் பதிவாக இடுவதே சிறப்பாக அமையும். அடுத்த பதிவில் அதை பதிக்கிறேன்.

புதன், 17 நவம்பர், 2010

இஸ்லாமிய மனித உரிமைகள்


1. உயிர் மற்றும் உடைமைப் பாதுகாப்பு:

இறுதி ஹஜ்ஜின் போது முஹம்மத் நபி (ஸல்) கூறினார்கள்:

(இறைவனை நீங்கள் சந்திக்கும் இறுதித் தீர்ப்பு நாள் வரை) ஒருவர் மற்றவரின் உடைமையை, உயிரை பறிக்கக் கூடாது.

முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகளைக் குறித்து முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஓரு திம்மியை (முஸ்லிமல்லாத குடிமகனை) கொலை செய்பவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாது.



2. மனித மாண்பின் பாதுகாப்பு:

குர்ஆன் கூறுகிறது:

i. ஒருவரையொருவர் பரிகாசம் புரியாதீர்.

ii. அவதூறு கற்பிக்காதீர்

iii. பட்டப்பெயர் சூட்டி இழிவு படுத்தாதீர்.

iV. புறங்கூறாதீர், தரக்குறைவாக பேசாதீர்.




3. தனிநபர் வாழ்வும் புனிதமும்:

1. உளவு பார்க்காதீர்

2. உரியவரின் அனுமதியின்றி ஒரு வரின் வீட்டுக்குள் நுழையாதீர்